ரசாயன கொசு மருந்துகள் வேண்டாம் ..இப்படி செஞ்சு பாருங்க... வீட்ல ஒரு கொசு கூட வராது..!
மழைக்காலம் வந்தாலே கொசுக்கள், ஈக்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் விரைவில் சொறி , மலேரியா மற்றும் டெங்கு போன்ற பல தொற்றுநோய்கள் பரவ ஆரம்பித்துவிடும்.
இந்த பிரச்சனையை சமாளிக்க ரசாயன மருந்துகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே கொசுக்களை எளிதில் விரட்ட இயற்கையான முறையை பயன்படுத்துவதே சிறந்தது.
துளசி இலையை நைசாக அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். பின்னர் அதை வீடு முழுவதும் தெளிக்கவும். துளசியின் வாசனையிலிருந்து கொசுக்கள் ஓடிவிடும்.
முதலில் எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் சில கிராம்புகளை அரைக்கவும். பிறகு கிராம்பில் எலுமிச்சையில் சாறு சேர்த்து வீட்டின் அனைத்து மூலைகளிலும் வைத்தால் கொசுக்கள் அண்டாது.
வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து சருமத்தில் தடவி வருவதன்முலம், நன்மை கொசுக்கள் அண்டாமல் பாதுகாக்கலாம்.
வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும். கற்பூரத்தை ஏற்றி அரை மணி நேரம் கழித்து, கதவு மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும். கற்பூர வாசனை கொசுக்களை விரட்டி அடிக்கும்.
பூண்டு வாசனை கொசுக்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். பூண்டுகளை ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி நன்கு கலக்குங்கள். இப்போது இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கவும். இவ்வாறு செய்வதால் கொசு தொல்லை இருக்காது.
Explore