மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
Photo: wikipedia
வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதைச் சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி, காலை- மாலை என இருவேளை அருந்தி வரலாம்.
Photo: wikipedia
மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தி வந்தால், வயிற்று வலி மற்றும் அஜீரணம் நீங்கும்.
Photo: wikipedia
மல்லிகைப் பூவை தேனில் கலந்து சாப்பிடுவது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் என்று கூறப்படுகிறது.
Photo: wikipedia
மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
Photo: wikipedia
அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
Photo: wikipedia
குறிப்பு: எந்த மருத்துவ குணத்திற்காகவும் மல்லிகைப் பூவை உட்கொள்ளும் முன், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.