டான்சில் சுரப்பி என்றால் என்ன? அதன் பாதிப்பினால் ஏற்படும் விளைவு?

தொண்டையின் உட்புறத்தில், இரண்டு பக்கங்களிலும் இயற்கையாக அமைந்திருப்பதுதான் டான்சில் சுரப்பியாகும்.
இந்த டான்சில் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு வேலையைப் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
வைரஸ் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக் கிருமிகள் நமது உடலுக்குள், நாம் உண்ணும் உணவுடன் சேர்ந்து நுழையும்போது, இந்த டான்சில் சுரப்பிகள் தான் அந்தக் கிருமிகளை நம் உடலுக்குள் போய் நோயை உண்டுபண்ணவிடாமல் தடுக்கிறது.
இவ்வாறு கிருமிகளைக் கண்டுபிடித்து எதிர்க்கும்போது முதலில் டான்சில் சுரப்பிகள் தான் அந்த நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன.
முதலில் தொண்டைவலி, அடுத்து எச்சில் கூட விழுங்க முடியாத நிலை, வாயை நன்றாக திறக்க முடியாத நிலை, உணவை விழுங்கும் போது வலி என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வந்து ஆளைப் படுக்க வைத்துவிடும்.
பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத் தான் அடிக்கடி இந்த டான்சிலைட்டிஸ் என்கிற டான்சில் பாதிப்பு நோய் வருகிறது.
டார்ச் லைட் வெளிச்சத்தில் தொண்டையின் உள் பகுதியைப் பார்த்தாலே, இரண்டு பக்கமும் நன்றாக வீங்கி, சிவந்து, சில நேரங்களில் டான்சில் சுரப்பிகளின் மேற்பகுதியில் சீழ் பிடித்துக்கூட காணப்படும்.
டான்சில் பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால், அதாவது வருடத்தில் ஒரு முறை அல்லது இருமுறை ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சையிலேயே சரிசெய்து கொள்ளலாம். வருடத்திற்கு நான்கைந்து முறை தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் , அதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு.
குளிர்ச்சியான உணவுப்பொருட்கள், குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்கிரீம், கெட்டுப்போன உணவுப் பொருட்கள் போன்றவற்றை குழந்தைகள் அடிக்கடி உட்கொள்ளும்போது தான் டான்சிலைட்டிஸ் நோய் வருகிறது.
Explore