ராமாயண கதாபாத்திரங்கள்

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்த ராமபிரானின் காவியம் இடம்பெற்ற ராமாயணம், சிறப்பு வாய்ந்த இதிகாசங்களில் ஒன்று. இந்த ராமாயண காவியத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ராமாயண கதாபாத்திரங்கள்
Published on

* வசிஷ்டர்:- தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.

* ராமன்:- ராமாயண கதாநாயகன், திருமால் எடுத்த அவதாரங்களில் மனிதனாக வாழ்ந்தவர்.

* சீதா:- ராமனின் மனைவி. ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு.

* ராவணன்:- விச்ரவா என்பவரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.

* லட்சுமணன்:- ராமபிரானின் தம்பி. சுமித்திரையின் மூத்த மகன். ராமனுக்கு பணிசெய்வதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவன்.

* தசரதர்:- ராமனின் தந்தை.

* அகல்யை:- ராமரின் காலடி பட்டு சாபம் நீங்கப்பெற்றவள்.

* அங்கதன்:- வாலி - தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.

* இந்திரஜித்:- ராவணனின் மகன். மேகநாதன் என்ற பெயரும் கொண்டவன். லட்சுமணனால் அழிந்தவன்.

* கரன் மற்றும் தூஷணன்:-

ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.

* கபந்தன்:- தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம - லட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்.

* குகன்:- வேடர் தலைவன், படகோட்டி, ராமரால் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன்.

* கும்பகர்ணன்:- ராவணனின் தம்பி, ஆறு மாதங்கள் சாப்பிட்டும், மீதமுள்ள ஆறு மாதங்கள் பெரும் தூக்கம் தூங்கியே பொழுதைக் கழிப்பவன்.

* கவுசல்யா, கைகேயி, சுமித்திரை:- தசரதரின் பட்டத்

தரசிகள்.

* சுநைனா:- ஜனகரின் மனைவி, சீதையின் தாய்.

* கவுதமர்:- அகல்யையின் கணவர், முனிவர்

* சதானந்தர்:- அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.

* சம்பராசுரன்:- இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.

* சபரி:- மதங்க முனிவரின் மாணவி, ராமனை தரிசித்தவள்.

* சதபலி:- வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.

* சம்பாதி:- கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண அங்கதனின் படைக்கு உதவியவன்.

* சுமந்திரர்:- தசரதரின் மந்திரி, தேரோட்டி.

* சுக்ரீவன்:- கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியன் அருளால் பிறந்தவன்.

* சுஷேணன்:- வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச் சென்றவன்.

* சூர்ப்பணகை:- ராவணனின் தங்கை.

* தாடகை:- காட்டில் வசித்த அரக்கி, ராமனால் அழிந்தவள்.

* தாரை:- வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.

* திரிசடை:- அசோகவனத்தில் இருந்த அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.

* நளன்:- பொறியியல் அறிந்த வானரவீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்.

* நீலன்:- வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்.

* பரதன்:- கைகேயியின் மகன், ராமனின் தம்பி.

* மந்தரை:- கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி.

* மண்டோதரி:- தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.

* மாரீசன், சுபாகு:- தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.

* ருமை:- சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.

* லங்காதேவி:- இலங்கையின் காவல் தெய்வம்.

* சமுத்திரராஜன்:- கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்.

* வால்மீகி:- ராமாயணத்தை எழுதியவர்.

* வாலி:- இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.

* விஸ்வாமித்ரர்:- ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர்.

* விபீஷணன்:- ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.

* ஜடாயு:- கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.

* ஜனகர்:- சீதை, ஊர்மிளாவின் தந்தை

* ஜாம்பவான்:- கரடி வேந்தர், பிரம்மா அருள்பெற்று பிறந்தவர்.

* அனுமான்:- அஞ்சனை - கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவர். ராமபிரானின் முதன்மையான பக்தர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com