

மும்பை,
மும்பையை சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைன் மூலமாக கொல்கத்தாவை சேர்ந்த ஹம்சா அன்வர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. கிரிப்டோகரன்சியில் பணம் முதலீடு செய்தால் 30 முதல் 35 நாட்களுக்குள் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய மும்பை நபர் ரூ.75 ஆயிரத்தை செலுத்தினார். பணத்தை பெற்ற ஹம்சா அன்வர் அதன்பின்னர் தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மும்பை நபர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தொழிற்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த ஹம்சா அன்வர்ரை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் உள்பட மற்ற உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை மும்பை அழைத்து வந்து மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.