தனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்

காரைக்காலில் உள்ள தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்
Published on

திருநள்ளாறு

காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூர், திருநள்ளாறு, நெடுங்காடு திரு-பட்டினம் மற்றும் நாகை, திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கும் காரைக்காலில் இருந்து 30-க்கு மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த பஸ்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் இன்று காரைக்கால் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com