புதுடெல்லி,.2022-23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: .கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதுசம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் - நிதியமைச்சர் ட்ரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம் - நிதியமைச்சர்நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 18 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ48,000 கோடி ஒதுக்கீடு3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடுஇந்தியாவில் தொடரந்து ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும்.மின்னணு பாஸ்போர்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும்