காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் சிவா தாபா தோல்வி

இந்த போட்டியில் சிவா 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
Image Tweeted By @BFI_official
Image Tweeted By @BFI_official
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 5 பதங்கங்களை வென்றுள்ளது.

இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 63.5 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் பாகிஸ்தானின் சுலேமான் பலோச்சை வீழ்த்தி இந்திய வீரரான சிவா தாபா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் ஆடவருக்கான 63.5 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்காட்லாந்து வீரர் ரீஸ் லிஞ்ச் உடன் சிவா தாபா இன்று மோதினார். இந்த போட்டியில் சிவா 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் அவரின் பதக்க கனவு தகர்ந்துள்ளது.

அதே நேரத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com