காமன்வெல்த் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார் பி.வி. சிந்து

2-வது சுற்றில் பி.வி. சிந்து உகாண்டா வீராங்கனை ஹுசினா கோபுகபேவை எதிர்த்து விளையாடினார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் போட்டியில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி. சிந்து எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் இன்று நடந்த 2-வது சுற்றில் பி.வி. சிந்து உகாண்டா வீராங்கனை ஹுசினா கோபுகபேவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-10, 21-9 என்ற செட் கணக்கில் ஹுசினாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com