மேற்கு வங்காளம்: வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை

மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

கொல்கத்தா,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதன்படி மேற்கு வங்காள மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் 11 அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு, வாக்குச்சாவடிக்குள் பூத் ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை என்பன உள்ளிட்ட 954 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு சுமூகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com