

மும்பை,
50 ஓவர் ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பையில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் சீரிஸ் சுற்று, சூப்பர்7 சுற்று என புதிய வடிவத்தில் நடைபெறுவதால் முன்பை விட அதிகமான ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும்.
எனவே அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 17 ஆக உயர்த்த ஐ.சி.சி. அனுமதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு வலியுறுத்தியுள்ளார்.