2வது டி20 : அதிரடியில் மிரட்டிய தசுன் ஷனகா - இலங்கை அணி 206 ரன்கள் குவிப்பு

தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.
2வது டி20 : அதிரடியில் மிரட்டிய தசுன் ஷனகா - இலங்கை அணி 206 ரன்கள் குவிப்பு
Published on

புனே,

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இலங்கை அணியின் தொடக்க அணியின் வீர்ரகள் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் அமைத்தனர் . சிறப்பாக விளையாடிய குஷால் மெண்டிஸ் அரைசதம் அடித்தார்.

தொடக்க விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் குசால் மெண்டிஸ் 52 ரன்களில் வெளியேறினார்.பின்னர் பதும் நிசாங்கா 33 ரன்கள் , பாணுகா ராஜபக்ச 2 ரன்கள் , சரித் அசலங்கா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா பந்துகளை சிக்ஸர் , பவுண்டரிக்கு பறக்க விட்டார் .சிறப்பாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை இலங்கை அணி குவித்தது. இந்தியா சார்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட் , அக்சர் படேல் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com