3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா கடைசி ஓவரில் இலக்கை எட்டியது.
3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
Published on

ஹராரே,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் சிகந்தர் ராசா சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். கிரேக் எர்வின் 59 ரன்களும், இன்னசென்ட் கையா 55 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கத்தில் எதிர்பார்த்தபடி ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஆஸ்திரேலியா நெருக்கடியில் சிக்கியது.

ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸ் அபாரமாக விளையாடி 103 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்சில் 11 பவுண்டரிகள் அடங்கின.

அலெக்ஸ் கேரி 34 ரன்களும், கூப்பர் கானொலி 21 ரன்களும் எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நாதன் எலிஸ் பொறுப்புடன் விளையாடி 43 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

அவரது ஆட்டத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. இதனால் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com