

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தகவல்களின்படி, போட்டிகள் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த தொடரின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்திய மண்ணில் ஆப்கானிஸ்தான் இந்தியாவை "சொந்த மைதான" அணியாக எதிர்கொள்ளும் முதல் இருதரப்பு சர்வதேச தொடர் இதுவாகும். பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு காரணங்களால், ஆப்கானிஸ்தான் தனது சொந்த மைதானப் போட்டிகளை பல ஆண்டுகளாக இந்தியாவின் டேராடூன், நொய்டா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் நடத்தி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவிலேயே "ஹோம் சீரிஸ்" நடத்துவது இதுவே முதல் முறை