அஸ்வினின் அனுபவம் இந்தியாவிற்கு முக்கியம்- பிரட் லீ

அஸ்வினின் அனுபவம் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் அனுபவம் இந்தியாவிற்கு முக்கியம்- பிரட் லீ
Published on

துபாய்,

இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி தான் ஆடிய முதல் போட்டியில் (பாகிஸ்தான்) தோல்வியை தழுவிய நிலையில், நாளை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரட் லீ, இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் தேவை என்று கூறியுள்ளார்.

அஸ்வின் பல இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறிய அவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com