ஆசிய கோப்பை: பாக்.அணிக்கு எதிராக அவர்கள் யாரும் விளையாட விரும்பவில்லை - இந்திய முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை: பாக்.அணிக்கு எதிராக அவர்கள் யாரும் விளையாட விரும்பவில்லை - இந்திய முன்னாள் வீரர்
x

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்து விட்டனர்.

மும்பை,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு ஒரு விஷயம் நிச்சயமாக தெரியும். வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விரும்பவில்லை. ஒரு வகையில், பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்களிடம் தனிப்பட்ட கருத்துகளை கேட்டால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை என்றே அவர்கள் தெரிவித்திருப்பார்கள் என்ற உண்மையை நான் சொல்வேன். அவர்களில் யாரும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை” என்று கூறினார்.

1 More update

Next Story