ஆசிய கோப்பை: அதிக ரன், விக்கெட் வீழ்த்தப்போகும் வீரர்கள் யார்-யார்..? தினேஷ் கார்த்திக் கணிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது கணிப்பின் படி, சுப்மன் கில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேனாகவும், வருன் சக்ரவர்த்தி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் இந்த தொடரை நிறைவு செய்வர் என்று கூறியுள்ளார்.






