ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: ஜப்பானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆசிய விளையாட்டு போட்டி
Published on

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி

ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பெண்கள் கிரிக்கெட் போட்டியும் நேற்று தொடங்கியது. 20 ஓவர் வடிவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து அணிகளும் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் இந்தியா

நடப்பு சாம்பியனான இந்திய பெண்கள் அணி இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளநிலையில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஜப்பான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அரையிறுதியில் வங்காளதேசம்

இந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வங்காளதேச அணியை எதிர்கொள்ளும்.

இதனால் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி பட்டத்தை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com