வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாவே அணிக்கு 477 ரன்கள் வெற்றி இலக்கு

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நேற்றைய ஆட்டநேரமுடிவில், ஜிம்பாவே அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாவே அணிக்கு 477 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

ஹராரே,

ஹராரேவில் நடந்து வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 192 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஷத்மான் இஸ்லாம் (115 ரன்), நஜ்முல் ஹூசைன் ஷான்டோ (117 ரன்) சதம் அடித்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 477 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 4-ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரண்டென் டெய்லர் 92 ரன்கள் எடுத்தார். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. தற்போது ஜிம்பாவே அணி, வங்கதேச அணியை விட 337 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com