பி.சி.சி.ஐ.-க்கு இடைக்கால செயலாளர் நியமனம்

பி.சி.சி.ஐ.-ன் செயலாளராக இருந்த ஜெய் ஷா தற்போது ஐ.சி.சி. தலைவராகியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியுள்ளது கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியாவை தலைவர் ரோஜர் பின்னி நியமித்துள்ளார். சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும்  வரையில் இவர் இந்த பதவியில் தொடர உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com