கரீபியன் பிரீமியர் லீக்: செயின்ட் லூசியாவுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜமைக்கா

கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரீபியன் பிரீமியர் லீக்: செயின்ட் லூசியாவுக்கு  170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜமைக்கா
Published on

செயின்ட் லூசியா,

கரீபியன் பிரீமியர் லீக்

14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

செயின்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென்

இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 13வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதி வருகின்றன.

ஜமைக்கா 169 ரன்கள்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் கேசி கார்டி அதிகபட்சமாக 50 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ஜமைக்கா வீரர் மேத்தீவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா கிங்ஸ்மென் களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com