கர்நாடகாவில் நாளை மிககனமழைக்கு வாய்ப்பு...பெங்களூரு - சி.எஸ்.கே போட்டி நடைபெறுவதில் சிக்கல்...?

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறின.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ( 18 ரன் வித்தியாசம் அல்லது இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடிக்க வேண்டும்) கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறும். இந்நிலையில் பெங்களூருவில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com