

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் போட்டிகள் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகளை செப்டம்பர் 11, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளுக்கு மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அட்டவணை மாற்றம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.