பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி: டெல்லி கேப்டன் கூறியது என்ன ?

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி, குருனல் பாண்டியா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர் . நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது . இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது,
நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம். . முதல் இன்னிங்ஸில் விக்கெட் கொஞ்சம் கடினமாக இருந்தது , ஆனால் பனி பெய்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் அது தளர்ந்துவிட்டது. சில கேட்சுகளை நாங்கள் தவறவிட்டோம், அந்த கேட்சுகளை எடுத்திருக்க வேண்டும் .
நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். ஒரு பேட்டர் நடுவில் சிறிது நேரம் நிலைத்து விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் , நாங்கள் கூடுதலாக 10-15 ரன்கள் எடுத்திருக்கலாம். என தெரிவித்தார்.