டெல்லி அணிக்கு எதிரான தோல்வி...ரிஷப் பண்ட் கூறியது என்ன ?

6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
டெல்லி அணிக்கு எதிரான தோல்வி...ரிஷப் பண்ட் கூறியது என்ன ?
Published on

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 18.4 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணிக்கு

17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

தோல்வி தொடர்பாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது,

நாங்கள் பேட் செய்த விதத்தில், எங்களால் நீண்ட நேரம் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. ஒரு நல்ல ஆடுகளத்தில் எங்களிடம் ரன்கள் குறைவாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நான் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தேன். இது ஆட்டத்தின் ஒரு அங்கம்தான். 140 ரன்கள் எடுக்கும்போது, ​​எதிரணியை அவ்வளவாக அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியாது, குறிப்பாக இது போன்ற ஒரு நல்ல விக்கெட்டில். ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். நாங்கள் பந்துவீசிய விதம், குறிப்பாக நாங்கள் தொடங்கிய விதம், நிச்சயமாக இந்த சீசனில் முன்னேறிச் செல்வதற்கான சில நல்ல அறிகுறிகளாகும். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com