இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவற விடும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்.. வெளியான தகவல்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவற விடும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்.. வெளியான தகவல்
x

image courtesy: twitter/@ICC

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்கள் எந்த வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இந்த காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வர சுமார் 4 மாத காலம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.


Next Story