

பர்மிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ் தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலா வது டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்தி லும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததுடன், தொடரையும் 0-2 என்ற கணக்கில் தாரை வார்த்தது. மோசமான தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியில் தடாலடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ரிஸ்வான், சல்மான் ஆஹா, இமாம் உல்-ஹக் உள்பட 7 வீரர்கள் நீக்கப்பட்ட னர். டெஸ்ட் பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமதுவும் விடுவிக்கப்பட்டதால், அவ ருக்கு பதிலாக வெள்ளைநிற பந்து போட்டி பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் டெஸ்ட் போட்டிக் கான பயிற்சி பணியையும் கவனிக்க உள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (மாலை 3.30 மணி) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையுடன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து வரிந்து கட்டுகிறது.பாகிஸ்தான் ஆறுதல் வெற்றிக்காக முயற்சிக்கு