

லண்டன்,
இங்கிலாந்து, இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து, ஆறுதல் வெற்றிபெற இலங்கையும் முனைப்புகாட்டு என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.