முதல் ஒருநாள் போட்டி; சரித் அசலங்கா அபார சதம்...இலங்கை 273 ரன்கள் சேர்ப்பு..!

இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா (101 ரன்) சதம் அடித்து அசத்தினார்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

கொழும்பு,

ஜிம்பாப்பே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொலம்புவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அவிஷ்கா பெர்ணாண்டோ 0 ரன், குசல் மெண்டிஸ் 46 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய சதீரா சமரவிக்ரமா 41 ரன், ஜனித் லியனகே 24 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து சரித் அசலங்கா மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் களம் இறங்கினர். ஒரு முனையில் சரித் அசலங்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் சஹான் ஆராச்சிகே 11 ரன், தசுன் ஷனகா 8 ரன், மகேஷ் தீக்சனா 10 ரன், துஷ்மந்தா சமீரா 18 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சரித் அசலங்கா சதம் அடித்த நிலையில் 101 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா 101 ரன், மற்றும் குசல் மெண்டிஸ் 46 ரன் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, ப்ளெசிங் முசரபானி , பராஸ் அக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com