

செம்ஸ்போர்டு,
10-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை இங்கி லாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதற்கு தயாராகும் பொருட்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இந் தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முத லாவது டி20 கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லோட் டீன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் , யாஷிகா பாட்டியா இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் லாரன் பெல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்னர். இங்கிலாந்து அணியில் அமி ஜோன்ஸ் மட்டும் நிலைத்து விளையாடி 67 ரன்கள் குவித்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் நந்தினி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .