முதல் டெஸ்ட்: இலங்கை அணியை பந்தாடிய இந்தியா

2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.

முதல் டெஸ்ட்: இலங்கை அணியை பந்தாடிய இந்தியா
Published on

காலே,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா 462 ரன்கள்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை 284 ரன்கள்

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் தினுஷா 100 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மனவ் சுதர் அதிகபட்சமாக 4 விழ்த்தியிருந்தார்.

இந்தியா 193 ரன்கள்

இதன் மூலம் 178 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தின் 4வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்தியா 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 66 ரன்கள் விளாசினார். இலங்கை தரப்பில் பெர்னான்டோ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கைக்கு 372 ரன்கள் இலக்கு

இதன் மூலம் இலங்கைக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கை தடுமாற்றம்

இலங்கை வெற்றிபெற இந்தியா 372 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி அபார வெற்றி

இன்றைய 5 நாள் ஆட்டத்திலும் இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி சீரான விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 77.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 206 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி தரப்பில் சோனல் தினுஷா 84 ரன்களும், தனஞ்சய டி சில்வா (கேப்டன்) 59 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக மனவ் சுதர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com