

புதுடெல்லி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் மக்களுடன் ஒற்றுமையைக் காட்ட ஒவ்வொரு வாரமும் தனது நாட்டில் 30 நிமிட நிகழ்வு நடைபெறும் என்று அறிவித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி இந்த அழைப்பை ஆதரித்து அவர் கராச்சியில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு. மசார்-இ-காயிதில் இருப்பார் என்று கூறினார் ( பாகிஸ்தான் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவின் கல்லறை)
"எங்கள் காஷ்மீர் சகோதரர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த"செப்டம்பர் 6 ஆம் தேதி நான் ஒரு ஷாஹீத்தின் வீட்டிற்கு வருவேன். விரைவில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி உள்ளார்.
பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி காஷ்மீர் குறித்து வெளியிட்டு உள்ள டுவிட்டுக்கு பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர், நண்பர்களே ஷாஹித் அஃப்ரிடி முதிர்ச்சியடைய மறுத்துவிட்டார் என்பது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது !!! உதவிக்கு ஆன்லைன் மழலையர் பயிற்சி பள்ளிகளை ஆர்டர் செய்கிறேன். என டுவிட்டரில் கூறி உள்ளார்.
இதற்கு பதில் அளித்து டுவிட் செய்த அப்ரிடி கவுதம் கம்பீர் நான் பணிபுரிந்த பலவீனமான மற்றும் மனரீதியான மிகவும் பாதுகாப்பற்ற நபர்களில் ஒருவர் என கூறி உள்ளார்.
இது குறித்து கவுதம் காம்பீர் நிருபர்களிடம் கூறும் போது சிலர் ஒருபோதும் வளர மாட்டார்கள், அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு வயது இல்லை, அவர்களின் மூளையும் வளரவில்லை என கூறி உள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டத்தும் தன்னுடன் சேரத் தயாராக இருக்கும் மற்ற விளையாட்டு வீரர்களுடன் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வருவார் என்று கூறியிருந்தார். கட்டுப்பாடு கோடு அருகே அமைதிக்காக ஒரு கொடியை ஏற்றி வைப்பேன் என்று மியாண்டத் கூறி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கான், எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு சென்று அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சந்தித்தார். பாகிஸ்தான் ராணுவம் குத்துச்சண்டை வீரருக்கான சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.