“நோ-பால் வீசினால் அபராதம்”- சுனில் கவாஸ்கர் அதிரடி கருத்து

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
“நோ-பால் வீசினால் அபராதம்”- சுனில் கவாஸ்கர் அதிரடி கருத்து
Published on

சென்னை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு நோ-பாலுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

2 டெஸ்டில் 20 நோ-பால்கள்

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தம் 20 நோ-பால்களை வீசியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் 7 நோ-பால்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 நோ-பால்களும் வீசப்பட்டன.

அபராதம் இரட்டிப்பு

இந்நிலையில், இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்துவதற்கு பந்துவீச்சாளர்களுக்கு அபராதம் விதிப்பது அவசியம் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

நோ-பால் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அதே வீரர் மீண்டும் நோ-பால் வீசினால் அபராதத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடரை கைப்பற்றிய இந்தியா

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com