

திருப்பதி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது தனது காதலியான மாடல் அழகி 'மஹிகா சர்மாவுடன்' சேர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் இருவரும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்த வருகையின் போது, ஹர்திக் பாண்ட்யா மொட்டை அடித்த புதிய தோற்றத்தில் காணப்பட்டார். பாரம்பரிய உடையில் கோவில் வளாகத்தில் நடந்துசென்ற அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.