அலட்சியத்தால் விக்கெட்டை பறிகொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்..! வீடியோ

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
அலட்சியத்தால் விக்கெட்டை பறிகொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்..! வீடியோ
Published on

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்துள்ளது. தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் அலட்சியமாக செயல்பட்டு ரன் அவுட்டில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீப்பரிடம் பந்து வருவதற்குள் கிரீஸ்-க்குள் செல்ல தேவையான நேரம் இருந்தும், அலட்சியமாக ஓடிவந்து ரன் அவுட்டில் வெளியேறினார். இதனால் 49 ரன்களில் ஆட்டமிழந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com