சுந்தர்- ஷெப்பர்ட் ஜோடியின் கடைசி கட்ட அதிரடி- பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்

பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் பிரார் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
Image Courtesy : Twitter @IPL 
Image Courtesy : Twitter @IPL 
Published on

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரியம் கார்க் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரியம் கார்க், ரபாடா பந்துவீச்சில் கேப்டன் மயங்க் அகர்வால்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவரும் 20 ரன்களில் ஆட்டமிழந்து நடையைக்கட்ட சிறப்பாக விளையாடிவந்த அபிஷேக் சர்மா 43 ரன்களில் ஹர்ப்ரீத் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு பஞ்சாப் அணி ஐதராபாத் அணி சரிவை நோக்கி சென்றது. பூரன் 5 ரன்களிலும் மார்க்ரம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி 5 ஓவரில் வாஷிங்டன் சுந்தர் - ரொமாரியோ ஷெப்பர்ட் ஜோடி அதிரடி காட்டினர். வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. 

பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் பிரார் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 158 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com