

ஜோகன்னஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் கூறுகையில், இந்த டெஸ்டில் 3-வது நாளில் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லை. பல முறை பந்து வீரர்களின் உடலை பதம் பார்த்தன. அந்த சமயத்திலேயே இந்த ஆட்டத்தை நிறுத்தி, போட்டியை கைவிட்டிருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிலிப் ஹூயூக்சுக்கு நடந்தது போல் யாருக்காவது நடந்திருந்தால் என்ன ஆவது? டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மக்கள் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஆனால் நாங்களும் மனிதர்கள் தானே என்றார்.