ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
Published on

ஹராரே,

இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார்.ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிலைத்து விளையாடிய அவர் 81 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார்.

அவருக்கு துணையாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 29 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முக்கியமான கட்டத்தில் 27 ரன்கள் எடுத்து அணிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வாய்ப்பு அளிக்கவில்லை.

ரியான் பர்ல் மட்டும் அதிரடியாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com