20 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளது - அப்ரிடி கணிப்பு..!!

இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

கராச்சி,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது :

இந்தியா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இங்கிலாந்து தொடரை வெல்ல அவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் சிறப்பான பந்துவீச்சை கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com