இந்திய வீராங்கனை புதிய சாதனை

ஷ்ரீ சரணி 22 வயதில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய வீராங்கனை புதிய சாதனை
Published on

துபாய்,

இந்தியாவின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரீ சரணி 22 வயதில் புதிய சாதனை படைத்துள்ளார். 2026 மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதியில் வங்காள தேசத்துக்கு எதிராக 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன் இந்தியாவின் ஆடவர் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஷ்ரீ சரணி அதைவிட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com