ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சீனா புறப்பட்டு சென்றது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி...!

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
Image Courtesy: @Media_SAI
Image Courtesy: @Media_SAI
Published on

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விவரம்:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிசா கோஷ் (துணை கேப்டன்), அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, டிடாஸ் சாது, ராஜேஷ்வரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அகுஜா, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), அனுஷா பாரெட்டி, பூஜா வஸ்த்ரகர்.

காத்திருப்பு வீரர்கள்: ஹார்லீன் தியோல், காஷ்வீ கவுதம், சினே ராணா, சைகா இஷாக்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com