ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகல்

கொல்கத்தா அணி 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகல்
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டு நடந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் 5 வெற்றி மட்டுமே பெற்று 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 சீசன்களாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய மும்பையை சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து நேற்று விலகினார். அவரது வழிகாட்டுதலில் கொல்கத்தா அணி 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் அபிஷேக் நாயர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com