ஐபிஎல்: டெல்லி அணியில் இணையும் பயிற்சியாளர் குழு

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது

ஐபிஎல்: டெல்லி அணியில் இணையும் பயிற்சியாளர் குழு
Published on

புதுடெல்லி,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.


இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சாமிந்தா வாஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது

இந்திய அணியின் முன்னாள் லெக்-ஸ்பின்னர் அமித் மிஸ்ராவும் டெல்லி கேபிடல்ஸ் பயிற்சி குழுவில் இணைய உள்ளார். அவர் அணியின் சுழற்பந்து வீச்சு பிரிவுடன் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பயிற்சி குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளர் அல்லது உதவி பயிற்சியாளர் குழுவில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் சௌரவ் கங்குலி, யுவராஜ் சிங், சாமிந்தா வாஸ், அமித் மிஸ்ரா என முன்னாள் நட்சத்திர வீரர்கள் அடங்கிய வலுவான பயிற்சி குழுவை டெல்லி கேபிடல்ஸ் உருவாக்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com