

துபாய்,
14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. கொல்கத்தா அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இதனால் ரஸ்செல் விளையாடவில்லை.