ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய பணித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. #IPL
ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய பணித்தது டெல்லி டேர்டெவில்ஸ்
Published on

புதுடெல்லி,

11-வது ஐபிஎல் போட்டித்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com