

லக்னோ,
19வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. புதிய லோகோவை லக்னோ அணி வெளியிட்டுள்ளது. புதிய ஜெர்சியையும் அந்த அணி விரைவில் வெளியிட உள்ளது. லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.