ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியில் லீவிஸ் ஒப்பந்தம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு லீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்,

கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரத்தில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருப்பதால் அவர்களுக்கு பதிலாக வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் ஆகியோரை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com