ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு
Published on

துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, ஐதராபாத் அணி தொடக்க ஆட்டகாரர்கள் களம் இறங்கி விளையாடி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com