ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on

போட்செஸ்ட்ரூம்,

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போர்ட்செஸ்ட்ரூமில் இன்று நடந்த முதலாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலிமையுடன் உள்ளது. அதைப்போன்றுபாகிஸ்தான் அணியிலும் அதிவேக பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இப்போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரொஹைல் நசீர் (62), ஹைதர் அலி (56) மற்றும் முகமது ஹாரீஸ் (21) ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதன்பின்பு விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (105), சக்சேனா (59) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 176 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தொடர்ந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com