டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு : மழை மீண்டும் தொடங்கியதால் போட்டி தொடங்குவதில் சிக்கல்

மழை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு : மழை மீண்டும் தொடங்கியதால் போட்டி தொடங்குவதில் சிக்கல்
Published on

கவுகாத்தி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைய உள்ளது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இந்த சூழலில் அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மழை நின்றதால் போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com